தமிழகத்தின் தங்கமகன் மாரியப்பன் தங்கவேலு!
Oct 2, 2025, 08:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தின் தங்கமகன் மாரியப்பன் தங்கவேலு!

Web Desk by Web Desk
May 23, 2024, 04:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜப்பானில் நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு.. இது குறித்த செய்தி தொகுப்பு ஒன்றை பார்க்கலாம்..!

பாராலிம்பிக்ஸ் தொடர் மூலம் பார் போற்றும் நாயகனாக உருவானவர் தான் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு. உயரம், தமக்கு இருக்கும் குறை இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு இந்தியாவுக்காக பாரா தடகள போட்டிகளில் உலகம் முழுவதும் கலக்கி வருகிறார்.

உயரம் தாண்டுதலில் 2016 ரியோ பாராலிம்பிக்கில் தங்கமும், 2021 டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளியும் வென்று, இந்திய கொடியை கௌரவமாக தன் தோள்களில் ஏந்தினார்.

இந்தியாவின் முக்கிய நம்பிக்கையான மாரியப்பன் கடந்த 21ம் தேதி ஜப்பானில் நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

T63 பிரிவில் உயரம் தாண்டுதலில் 1.88 மீட்டர் உயரம் தாண்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதோடு மட்டுமல்லாமல், சாம்பியன்ஷிப் ரெக்கார்டையும் முறியடித்து அசத்தியிருக்கிறார்.

இதனை மேலும் பெருமையாக சொல்ல வேண்டும் என்றால், இனி உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில், சேலத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுவின் 1.88 மீட்டர் சாதனை தான், உச்சபட்ச சாதனையாக இருக்கக் கூடும்.

இதற்கு முன்னதாக உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் சரத் குமார் என்பவர், 1.83 மீட்டர் உயரம் தாண்டியிருந்ததே உச்சபட்ச சாதனையாக இருந்தது வந்தது.

தற்போது மாரியப்பன் அதனை முறியடித்துள்ளார். ரியோ பாராலிம்பிக் தொடரில் தங்கம் வென்றது முதலே தங்கமகன் என அழைக்கப்படும் மாரியப்பன் தங்கவேலு, தன்னை சார்ந்த பல்வேறு கட்ட பிரச்னைகள் இருந்தாலும் அவற்றை கருத்தில் எடுத்துக் கொள்ளாமல், விளையாட்டின் மீதான தனது உழைப்பை முழுமையாக கொடுத்துக் கொண்டிருந்தார்.

அதற்கு பலனாக கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பெரிய போட்டியில் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. “இவ்வளவு தூரம் வந்துட்ட, இன்னும் கொஞ்சம் அடி எடுத்து வச்சா இன்னொரு முறை இந்த உலகத்தை வாங்கலாம்” என நம்மை ஊக்கப்படுத்துபவர்கள் சொல்வதை நாம் கேட்டிருப்போம்.

அப்படி ஒவ்வொருவரின் ஊக்கமும் தான், எதிர்வரும் பாரிஸ் பாராலிம்பிக் தொடரில் மாரியப்பன் தங்கவேலுவை இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் வென்று கொடுக்க செய்யும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை…!

Tags: Tamil Nadu's Thangagan Mariappan Thangavelu!
ShareTweetSendShare
Previous Post

நியாயவிலைக் கடைகளின் நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும்! – கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு!

Next Post

தொடர் மழையால் மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Related News

ஆயுத பூஜை விடுமுறை – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

பொதுமக்களின் 70 % செலவு குறைப்பு ; மருத்துவத்துறையில் கலக்கும் மகாராஷ்ட்ரா – சிறப்பு கட்டுரை!

நேபாளம் – 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

சென்னை மதுரவாயல் நெடுஞ்சாலையில் தடுப்புகள் மீது கார் மோதி விபத்து – இருவர் பலி!

பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.எம்.தமிழ்குமரன் நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தேசியவாதிகளை வழக்குகளாலும் கைதுகளாலும் முடக்கிவிட முடியாது – நயினார் நாகேந்திரன்

சென்னையில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது – அண்ணாமலை கண்டனம்!

மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஆர்எஸ்எஸ் பணிகளால் ஈர்க்கப்பட்டனர் – ராம்நாத் கோவிந்த்

ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞர் – தர்ம அடி கொடுத்து போலீசிலில் ஒப்படைத்த பொதுமக்கள்!

தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு – கொடைக்கானல் மக்கள் கவலை!

பட்டாசு விற்பனை மந்தம் – சிவகாசி வியாபாரிகள் கவலை!

மகாத்மா காந்தி இறப்புக்கு பிறகு சுதேசியை மறந்து விட்டோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!

அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து – சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

திருவேற்காடு நகராட்சியில் 1.67 லட்சம் செலவில் கட்டப்பட்ட பூங்கா – மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை என புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies