இண்டி கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தால் பிரதமர் யார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், ஐந்து கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு 40 தொகுதிகள் கூட கிடைக்காது என தெரிவித்தார்.
சமாஜ்வாதி கட்சி 4 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது என்றும் அவர் கூறினார். ஒரு வேளை இண்டியா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தால் யார் பிரதமர் என்றும் அமித் ஷா கேள்வி எழுப்பினார்.
ஆண்டுக்கு ஒரு பிரதமர் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளதை சுட்டிய அமித்ஷா, இந்தியா மளிகைக் கடை அல்ல என்றும், 140 கோடி மக்கள் வாழும் நாடு என்றும் தெரிவித்தார்.