திருவள்ளுவர் திருநாளை ஒட்டி, மயிலாப்பூரிலுள்ள திருவள்ளுவர் கோயிலில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம் செய்தார்.
வைகாசி மாதத்தில் வரும் அனுஷ நட்சத்திரம் திருவள்ளுவரின் அவதார தினமாக திருவள்ளுவர் கோயிலில் கடைபிடிக்கப்படுகிறது.
இதனை ஒட்டி, திருவள்ளுவர் கோயிலில் தரிசனம் செய்த ஆளுநர் ஆர்.என்.ரவி, பின்னர் ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.