அமெரிக்காவின் கலிஃபோர்னியா கடற்கரையில் அரியவகை உயிரினத்தை எடுத்துச் சென்ற சிறுவர்களுக்கு 41 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
கலிஃபோர்னியா கடற்கரையில் சிதறிக் கிடந்த அரியவகை உயிரினமான மட்டியை, சிப்பி என நினைத்து சிறுவர்கள் எடுத்துச் சென்றபோது மீன்வளத் துறையினரிடம் சிக்கிக் கொண்டனர்.
பின்னர், இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்றதும் அந்தச் சிறுவர்களின் தாய்க்கு முதலில் 88 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
பின்னர், அவரது வாதத்தை ஏற்று 500 டாலராக அதாவது இந்திய மதிப்பில் 41 ஆயிரம் ரூபாயாக அபராத தொகை குறைக்கப்பட்டது.