சிவகங்கை அருகே 9 ஆண்டுகளுக்கு முன்பு 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், சிறுமியின் அண்ணன் மற்றும் அத்தைக்கு பத்தாண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 2015-ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீஸார், பாதிக்கப்பட்ட சிறுமியின் அண்ணன் முறை உறவினர் அரவிந்த், சித்தப்பா முத்துக்குமார், அத்தை செல்வி, அரசு போக்குவரத்து கழக நடத்துநர் நமச்சிவாயம், 2 மருத்துவர்கள் என 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதில், சிறுமியின் சித்தப்பா முத்துக்குமாரும், நடத்துநர் நமச்சிவாயமும் விசாரணையின்போது உயிரிழந்தனர். மற்ற நால்வரும் விடுதலை செய்யப்பட்டனர்.