திருச்சியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 10 அரசு பேருந்துகளுக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
நாங்குநேரியில் அரசுப் பேருந்தில் சென்ற காவலர் பயணச்சீட்டு எடுக்க மறுத்து நடத்துநரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத்துறை பரிந்துரைத்தது. இதற்குப் பதிலடியாக, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவதாகக் கூறி, தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளுக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்து வருகின்றனர்.
அந்த வகையில், திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ளூர் பேருந்துகள் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகும் நிற்பதாகக் கூறி, பத்துக்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகளுக்கு போக்குவரத்துக் காவல்துறையினர் தலா 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.