மணிமுத்தாறு அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்க 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி தேயிலைத் தோட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
இதன் காரணமாக மணிமுத்தாறு அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க 3-வது நாளாக வனத்துறை தடை விதித்துள்ளது.
மேலும் குதிரைவெட்டி, மாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல 8-வது நாளாக தடை நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது