ராமநாதபுரத்தில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் உறவினரை அடித்துக் கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
கிழக்கு சாயகார ஊரணியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரும் இவருடைய உறவினரான கணேசனும் ஒன்றாக சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர்.
அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மூங்கில் கம்பால் ரவிக்குமாரை கணேசன் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த ரவிக்குமார் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார் கணேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.