குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கன அடி உபரி நீர் திறக்கப்படுவதால், திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
இதனால் இங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க ஏழாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
மழை தொடர்வதால் கோதையாறு, தாமிரபரணி ஆறு, பரளி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.