தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே பொய்வழக்கு பதிவு செய்து, பணம் அபகரிப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் காவல் ஆய்வாளர் மீது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பெருமாள்புரத்தை சேர்ந்த காவல் ஆய்வாளர் விஜயகுமார் என்பவர்
மீது, பொய் வழக்கு பதிவு செய்தல், பணம் அபகரித்தல் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு உள்ளிட்டவை நிலுவையில் இருந்தது.
இந்நிலையில், வரும் 31 ஆம் தேதி காவல் ஆய்வாளர் விஜயகுமார் ஓய்வு பெற இருந்த நிலையில், இந்த வழக்குகள் காரணமாக பணியிடை நீக்கம் செய்து திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.