வெற்று விளம்பரங்களைத் தவிர்த்து தமிழ் வளர்ச்சிக்காக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் கடந்த மூன்றாண்டுகளில் தமிழ் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டிருப்பதாகவும், அத்திட்டங்களைச் செயல்படுத்தியதற்காக தமிழக அரசை ஆன்றோரும், சான்றோரும் பாராட்டுவதாகவும் தமிழக அரசு தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதை வழக்கமான விளம்பரமாகக் கருதி கடந்து செல்ல முடியவில்லை என்று, ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ் பயிற்று மொழி, தமிழ்க் கட்டாயப்பாட மொழி, கடைகளின் பெயர்ப்பலகைகளில் தமிழ் ஆகியவற்றை உறுதி செய்வது தான், தமிழ் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முதன்மையான நடவடிக்கைகள் என்று குறிப்பிட்டுள்ள அவர்,
தமிழ் வளர்ச்சியில் சாதனை படைத்து விட்டதாக வெற்று விளம்பரங்கள் செய்வதைத் தவிர்த்து, தமிழ் வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.