கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே பாகுபலி யானையின் வழித்தடம் அடைக்கப்பட்டதால்தான் யானை ஊருக்குள் வருவதாக வன ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
நெல்லி மலை வனப்பகுதியில் வாழ்ந்துவரும் பாகுபலி யானை, வலசை பகுதி வழியாக சென்று தண்ணீர் அருந்துவதாக கூறப்படும் நிலையில், அப்பகுதியில் தனியாரால் மின்வேலிகள் அமைக்கப்பட்டதாகவும், அதனால் தான் யானை ஊருக்குள் வரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
எனவே வனத்துறையினர் மின்வேலியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வன ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.