தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சரவணன், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 25 ஆண்டுகாலமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இதுவரை எந்த பயனும் கிடைத்தது இல்லை குற்றம் சாட்டினார்.