நெல்லையில் கொலை செய்யப்பட்ட தீபக் ராஜாவின் உடலை 6 நாட்களுக்கு பின் குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.
வாகைக்குளம் பகுதியை சேர்ந்த தீபக் ராஜா என்பவர், கடந்த 20-ஆம் தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில், இவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உடலை வாங்க மறுத்து தீபக்கின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், இவ்வழக்கில் நவீன், முருகன் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தீபக் ராஜாவின் உடலை குடும்பத்தினரிடம் பலத்த பாதுகாப்புடன் ஒப்படைக்கப்பட்டது.