இணையவழி பாலியல் சுரண்டலால் ஆண்டுக்கு 300 மில்லியன் குழந்தைகள் பாதிப்படைவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
குழந்தைகளிடம் இணையவழியில் ஆபாசமாக உரையாடி மிரட்டுவது, பாலியல் ரீதியாக அத்துமீறுவது என பல்வேறு கோணங்களில் சீண்டலில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.
ஸ்காட்லாந்தின் எடின்பரோ பல்கலைக்கழகம் மேற்கொண்ட இந்த ஆய்வில், ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு பள்ளியிலும், ஒவ்வொரு வகுப்பறையிலும் குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு இலக்காவது தெரியவந்துள்ளது.