டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ்குமார் ஜாமீனில் வெளியே வந்தால் தமக்கும், தனது குடும்ப உறுப்பினர்களின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் தெரிவித்துள்ளார்.
ஸ்வாதி மாலிவாலை தாக்கிய வழக்கில் கைதான பிபவ்குமாரின் ஜாமீன் மனு டெல்லி டீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான ஸ்வாதி மாலிவால், அமைச்சர்களுக்கு நிகரான சலுகைகளை பிபவ்குமார் அனுபவிப்பதாக குற்றம்சாட்டினார்.