குஜராத்தில் ராஜ்கோட் விளையாட்டு மைதானத்தில் தீ விபத்து ஏற்பட்டு 27 பேர் பலியான நிலையில், அந்த மாநகராட்சிக்கு குஜராத் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள், இது மனிதர்களால் மேற்கொள்ளப்பட்ட பேரிடர் என்றும், கடந்த 4 ஆண்டுகளாக அங்கு பாதுகாப்பு தணிக்கை நடத்தாமல், ராஜ்கோட் மாநகராட்சி தூங்குகிறதா என்றும் கேள்வி எழுப்பினர்.
முன்னதாக பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக 2 காவல் ஆய்வாளர்கள், மாநகராட்சி ஊழியர் ஒருவர் என 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.