ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் ஜாமின் மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நில மோசடி தொடர்புடைய வழக்கில், ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கடந்த ஜனவரி 31-ம் தேதி கைது செய்தது.
இவ்வழக்கில் ஜாமின் வழங்கக்கோரி, ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் தரப்பில் கடந்த திங்கட்கிழமையன்று ஜாமின் மனு தாக்கல் செய்தார்.
ஹேமந்த் சோரனின் ஜாமின் மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை வரும் 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.