டெல்லி மதுவிஹார் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 வாகனங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.
டெல்லியில் உள்ள மண்டவாலி காவல் நிலையம் அருகே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் அதிகாலை 1.17 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் 19 கார்கள் எரிந்து சேதமடைந்த நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.