இலங்கையில் அதிபர் மற்றும் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தலை 2 ஆண்டுகள் ஒத்திவைக்க ஆளும் ஐக்கிய தேசிய கட்சி பரிந்துரை செய்துள்ளது.
இலங்கை பொதுத் தேர்தல் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17-ஆம் தேதி வரை நடைபெறும் என அந்த நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இருப்பினும், பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை இன்னமும் மீளாததால், பொதுத் தேர்தலை 2 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க ஆளும் ஐக்கிய தேசிய கட்சி தேர்தல் ஆணையத்திடம் பரிந்துரை செய்துள்ளது.