மதுரை மாட்டுத்தாவணியில் கழிவுநீரை மழைநீர் வடிகாலில் கொட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 24ஆம் தேதி கழிவுநீரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள மழைநீர் வடிகாலில் விதிகளை மீறி கொட்டியதாக வீடியோ வெளியானது.
இதுகுறித்து புகார் தெரிவித்த நிலையில், வைகை செப்டிங் டேங்க் உரிமையாளர் மற்றும் ஓட்டுனர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.