பருவநிலை மாற்றத்தை ஆராய்வதற்காக ஐரோப்பிய யூனியனும், ஜப்பானும் இணைந்து பிரத்யேக செயற்கைகோளை விண்ணில் செலுத்தியுள்ளன.
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவிலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ராக்கெட் மூலம் இரண்டரை டன் எடைகொண்ட இந்த செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது.
புவியிலிருந்து 400 கிலோமீட்டர் சுற்றுவட்டப் பாதையில் இந்த செயற்கைகோள் வலம் வருகிறது. பருவநிலை மாற்றத்தில் மேகங்கள் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்ற விவரத்தை இந்த செயற்கைகோள் சேகரிக்கும் என்றும், சிக்கல் நிறைந்த இந்த செயற்கைகோள் திட்டம் ஏறத்தாழ 20 ஆண்டுகள் கழித்து நிறைவேற்றப்பட்டிருப்பதாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மைய நிபுணர் ராபின் ஹோகன் தெரிவித்துள்ளார்.