தென்மேற்கு பருவமழை கேரளாவுக்கு மழையையும் தமிழ்நாட்டுக்கு வறண்ட காற்றையும் மட்டுமே தரும் என ஓய்வு பெற்ற வானிலையாளர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகத்தின் எந்தெந்த பகுதிகளில் மழை பெய்யும் என்பது குறித்து ஓய்வுபெற்ற வானிலையாளர் பாலசுப்ரமணியன், தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
கடலோர மாவட்டங்களிலும், தமிழக உள் மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.
கோடை காற்று அதிக வலுவோடு இருப்பதால் சென்னையில் கடல் காற்று அதிக வெப்பத்தோடு வீசி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஜூன் 3,4, 5 ஆகிய தேதிகளில் மாலை நேரங்களில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.