நாகை அருகே பரவை காய்கறி சந்தையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்ட 800 கிலோ ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பழனிவேல் தலைமையில், பரவை காய்கறி சந்தையில் அதிகாரிகள் சோதனை செய்து 32 மூட்டைகளில் இருந்த 800 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
அதிகாரிகளை கண்டதும் அரிசி மூட்டைகளை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச்சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.