ராமநாதபுரத்தில் மதுபோதையில் பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கிய வழக்கில் இருவரை கைது செய்த போலீசார் ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
குயவன்குடி பகுதியில் இயங்கி வரும் தனியார் பெட்ரோல் பங்க்-கில் நுழைந்த ரூபன், முருகன், முரளி ஆகிய 3 பேர், அங்கு நின்றுக்கொண்டிருந்த நபர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதுடன் பெட்ரோல் பங்க்-கையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.