திருச்சியில் மதுபோதையில் தகராறு செய்த கணவனை தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
மணப்பாறை அடுத்த ஆவாரம்பட்டியை சேர்ந்தவர் வில்லியம் வேளாங்கண்ணி. இவர் மதுபோதையில் மனைவி அற்புதமேரியை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தாய் வீட்டிற்கு சென்ற அற்புதமேரி மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது மதுபோதையில் இருந்த கணவனை கண்டு ஆத்திரமடைந்த அவர், அம்மிக்கல்லை எடுத்து கணவனின் தலையில் போட்டுள்ளார்.
இதில் சம்பவ இடத்தில் வில்லியம் உயிரிழந்த நிலையில் அற்புதமேரியை போலீசார் கைது செய்தனர்.