திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
அச்சமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. ஷேர்ஆட்டோ ஓட்டுநரான இவர், பயணிகளை ஏற்றிக்கொண்டு புதுப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது சரவணன் என்பவர் ஓட்டி வந்த கார், ஷேர் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ஷேர் ஆட்டோவில் பயணித்த ராணி என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.