மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள பசுபதீஸ்வரர், வரதராஜ பெருமாள் கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
கொடவிளாகம் கிராமத்தில் பழமை வாய்ந்த பசுபதீஸ்வரர் கோயில் மற்றும் வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது.
இக்கோயில்களில் நடைபெற்ற திருப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து கணபதி ஹோமத்துடன் கூடிய யாகசாலை பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
இதையடுத்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட புனித நீர் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடத்தப்பட்டது.