கோவையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பெண் யானைக்கு உடல்நலம் தேறியதால் வனப்பகுதிக்குள் அனுப்பப்பட்டது.
மருதமலை வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெண் யானை குட்டியுடன் இருந்ததைக் கண்டனர்.
இதனையடுத்து கடந்த 4 நாட்களாக வன கால்நடை மருத்துவர்கள் யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் யானையின் உடல்நலம் தேறியதால் மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்பப்பட்டது.