தருமபுரியில் செல்போன் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதிரி பாகங்கள் எரிந்து சேதமடைந்தன.
பென்னாகரம் பழைய பேருந்து நிலையம் அருகே மொத்த விற்பனை செல்போன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடையில் திடீரென கரும் புகை வெளியேறி தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் பெரும் போராட்டத்துக்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் கடையில் இருந்த சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதிரி பாகங்கள் எரிந்து சேதமடைந்தன.