புதுச்சேரியில் மரம் விற்பனை செய்யும் கடைக்குள் நுழைந்த மர்ம கும்பல் கடையை சூறையாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
சாரம் பகுதியை சேர்ந்த முருகன், மரம் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்குள் நுழைந்த 15க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள், கடையை அடித்து உடைத்ததுடன் முருகன் மற்றும் அவரது குடும்பத்தினரையும் கடுமையாக தாக்கினர்.
இதுகுறித்து முருகன் காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.