நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது.
நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதேபோல், காங்கிரஸ் கட்சி 99 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 37, திரிணாமுல் காங்கிரஸ் 29, திமுக 22, தெலுங்கு தேசம் 16, ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் 292 தொகுதிகளில் வெற்றியை தக்க வைத்துள்ளனர். பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவை என்ற நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி அந்த இலக்கை கடந்து அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
எனவே பாஜக, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இல்லத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
இண்டியா கூட்டணி 236 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் 17 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.