ராமலிங்கம் பிரதிஷ்டை தினத்தை ஒட்டி ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் நடை வரும் 15ம் தேதி சாத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோதண்ட ராமர் கோயிலில் விபீஷண பட்டாபிஷேக விழா வரும் 15-ம் தேதி நடக்க உள்ளது. முன்னதாக ராமநாத சுவாமி கோயிலில் ராமர் புறப்பாடு நடத்தி ராவண சம்ஹார நிகழ்ச்சி நடைபெறும் எனவும் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் 15ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை கோயில் நடை சாத்தப்படும் என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.