தென்காசி மாவட்டம், பொய்கை அருகே காற்றாலையில் தீ விபத்து ஏற்பட்டதால் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.
பொய்கை காட்டுப்பகுதியில் தனியாருக்கு சொந்தமாக ஏராளமான காற்றாலைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் காற்றாலை ஒன்றில் கரும்புகையுடன் தீ பிடித்து எரிந்தது.
தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் பாதுகாப்பு கருதி அப்பகுதிக்கு மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.