மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் சிறுமி கடத்திச் செல்லப்படுவது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பார்வை மாற்றுத் திறனாளியான மாயவன் என்பவர், தனது தங்கை மகளான 11 வயது சிறுமியுடன் சீர்காழியில் யாசகம் பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் கோயில் பத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர், மாயவனுக்கு சாப்பாடு வாங்கித் தருவதாக கூறி சிறுமியை தன்னுடன் வருமாறு அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் வெகுநேரமாகியும் இருவரும் திரும்பாததால் அதிர்ச்சியடைந்த மாயவன், அங்கிருந்த பொதுமக்களிடத்தில் அழுது புலம்பியுள்ளார். இதுகுறித்த தகவலின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ரஞ்சித்தை கைது செய்து சிறுமியை பத்திரமாக மீட்டனர்.