என்டிஏ எம்.பி-க்கள் குழு தலைவராக பிரதமர் மோடி தேர்வு!
Jan 15, 2026, 07:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

என்டிஏ எம்.பி-க்கள் குழு தலைவராக பிரதமர் மோடி தேர்வு!

Murugesan M by Murugesan M
Jun 7, 2024, 03:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் குழு தலைவராக பிரதமர் மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை பெற்றது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக பிரதமர் மோடி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தேசிய ஜனநாயக எம்பிக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத்சிங், தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஏசி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த மோடிக்கு எம்பிக்கள் மற்றும் தலைவர்கள் எழுந்து நின்று கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். அரசியல் சாசன புத்தகத்தை வணங்கிய பின்னர் பிரதமர் மோடி மேடைக்கு சென்றார்.

இதனைத்தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் குழு தலைவராக பிரதமர் மோடியை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்மொழிந்தார். மத்திய அமைச்சர் அமித் ஷா, குமாரசாமி, சந்திரபாபு நாயுடு. நிதிஷ் குமார் உள்ளிட்ட தலைவர்கள் வழிமொழிந்து பேசினர்.

இதனையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் குழு தலைவராக பிரதமர் மோடி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

அப்போது எம்பிக்கள் மோடி, மோடி என உற்சாக குரல் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் பின்னர் பிரதமர் மோடிக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் ஆகிய இருவரும் பிரதமர் மோடிக்கு திருப்பதி வெங்கடாஜலபதி படத்தை பரிசாக வழங்கினார்.

Tags: pmmodispeechPM Modi selected as NDA MPs group leader!
ShareTweetSendShare
Previous Post

ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை அதிகரிக்க இன்னும் அதிகமாகப் பணியாற்ற விரும்புகிறோம்!- பிரதமர் மோடி

Next Post

ஜூன் 24ம் தேதி தொடங்குகிறது சட்டப்பேரவை கூட்டம்!

Related News

ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25% வரி விதிப்பு – இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு சர்ச்சை – இந்தியா-சீனா இடையே வெடிக்கும் புதிய மோதலுக்கு பின்னணி என்ன?

ஈரானில் நாளுக்கு நாள் தீவிரமடையும் மக்கள் புரட்சி – ஆட்சி கவிழும் அபாயத்தால் எண்ணெய் சந்தைகளில் அதிர்வு

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies