ஈரோடு மாவட்டம், தாளவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் நீர்நிலைகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு நகர்பகுதி மற்றும் ஆசனூர்,அரேப்பாளையம், கேர்மாளம் உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாது மழைபெய்தது.
இதன்காரணமாக அங்குள்ள நீரோடைகள், தரைப்பாலங்கள், தடுப்பணைகள் நிரம்பி காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. அளவுக்கதிகமாக ஓடும் நீரில் மரங்கள் அடித்து செல்லப்பட்டன.