நாட்டின் பிரதமராக மோடி இருக்கும் வரை இந்தியா யாருக்கும் அடிபணியாது என நடிகரும். ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் குழு தலைவராக பிரதமர் மோடி செய்யப்பட்டார். அப்போது வழிமொழிந்து பேசிய பவன் கல்யான், பிரதமர் மோடி 15 ஆண்டுகள் ஆள வேண்டும் என விரும்புவதாக தெரிவித்தார்.
கடந்த 2014ஆம் ஆண்டில் இதே இடத்தில் பிரதமர் மோடி 15 ஆண்டுகள் ஆள வேண்டும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்தது உண்மையாகியுள்ளதாகவும் பவன் கல்யாண் குறிப்பிட்டார்.