ஈரோடு மாவட்டம், கடம்பூர் அருகே சாலையை மறித்து நின்ற ஒற்றை யானையிடம் வழிவிடுமாறு வாகன ஓட்டிகள் கேட்டுக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதி அருகே, கடம்பூரில் இருந்து இருட்டிபாளையம் செல்லும் வழியில் உள்ள சாலையில் ஒற்றைக் காட்டு யானை நின்று கொண்டிருந்தது.
அப்போது அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், யானையிடம் வீட்டுக்கு போகணும் வழி விடுங்க சாமி என கூச்சலிட்டுள்ளனர்.
அதன் பின்னர் சிறிது நேரத்தில் யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.