SpaceX, xAI நிறுவனங்களில் இணைந்த தேவேந்திர சிங் சாப்லோட்.. உலகளாவிய AI துறையில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்...
May 1, 2026, 01:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

SpaceX, xAI நிறுவனங்களில் இணைந்த தேவேந்திர சிங் சாப்லோட்.. உலகளாவிய AI துறையில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்…

Manikandan by Manikandan
Mar 16, 2026, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் ஆராய்ச்சியாளர் தேவேந்திர சிங் சாப்லோட், எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ்AI நிறுவனங்களில் இணைந்து, மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு திட்டங்களில் பணியாற்ற உள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்…

உலகளவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் துறைகள் வேகமாக முன்னேறி வரும் நிலையில், இந்தியாவில் கல்வி பயின்ற பல ஆராய்ச்சியாளர்கள் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் முக்கிய பங்காற்றி வருகின்றனர். குறிப்பாக மனிதர்களைப் போன்ற சிந்தனை திறன் கொண்ட அதிநவீன நுண்ணறிவு அமைப்புகளை உருவாக்கும் முயற்சியில் பல உலக நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டு வரும் சூழலில், இந்திய வேர்களைக் கொண்ட ஆராய்ச்சியாளர்கள் அந்த முன்னேற்றத்தின் முக்கிய அங்கமாக மாறி வருகின்றனர்.

அந்த வகையில், இந்தியாவைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் ஆராய்ச்சியாளரான தேவேந்திர சிங் சாப்லோட்டும், தனது தொழில் சார்ந்த வாழ்க்கையில் முக்கிய முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக அறிவித்துள்ளார். அதன்படி, IIT BOMBAY முன்னாள் மாணவரான தேவேந்திர சிங், தற்போது ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் AI நிறுவனங்களில் இணைந்துள்ளதாகவும், வருங்காலத்தில் எலான் மஸ்குடன் இணைந்து மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு திட்டங்களில் பணியாற்ற உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தேவேந்திர சிங், உடலியல் உலகமும், டிஜிட்டல் உலகமும் இணையும் வகையில், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து திறமையான அமைப்புகளை உருவாக்கும் பணியில் ஈடுபட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “SUPER INTELLIGENCE” எனப்படும் மிக உயர்ந்த செயற்கை நுண்ணறிவு திறன்களை உருவாக்கும் முயற்சியில் நேரடியாக ஈடுபட இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் AI இணைந்து செயல்படுவதன் மூலம், உடலியல் மற்றும் டிஜிட்டல் நுண்ணறிவை ஒருங்கிணைக்கும் புதிய முன்னேற்றங்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது தொழில் வாழ்க்கையில் பல ஆண்டுகளாக ஆர்வத்துடன் ஆராய்ந்து வந்த ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகளுடன், தற்போதைய புதிய பணியிடம் முழுமையாக பொருந்துவதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையே, தேவேந்திர சிங்-ஐ வரவேற்கும் விதமாக பதிவிட்டுள்ள எலான் மஸ்க், அவரது பதிவை பகிர்ந்து “எக்ஸ் AI-க்கு வரவேற்கிறோம்” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2010-ம் ஆண்டு நடந்த ஐஐடி-ஜேஇஇ தேர்வில் 25-வது இடத்தை பெற்ற தேவேந்திர சிங், அதன் மூலம் IIT BOMBAY-ல் கல்வி பயின்றார். சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் 5-வது இடத்தை பெற்ற இவருக்கு, உலகளாவிய செயற்கை நுண்ணறிவு போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளை வழிநடத்திய அனுபவமும் உண்டு.

CVPR-2019 PointNav Challenge, CVPR-2020 ObjectNav Challenge, NeurIPS-2022 Rearrangement Habitat Challenge மற்றும் Visual-Doom AI Competition போன்ற போட்டிகளில், இவரது தலைமையிலான அணி சிறந்த சாதனைகளை படைத்தது. பின்னர் அமெரிக்காவில் உள்ள கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் பயின்ற தேவேந்திர சிங், அங்கு MACHINE LEARNING துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

இதற்கு முன் மிஸ்ட்ரல் AI நிறுவனத்தின் தொடக்கக் குழுவில் பணியாற்றி வந்த தேவேந்திர சிங் சாப்லோட், முகநூலின் AI ஆராய்ச்சி நிறுவனத்திலும் ஆராய்ச்சியாளராக பணி புரிந்துள்ளார். இந்நிலையில், இந்த புதிய பணியின் மூலம், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் துறைகளில், முக்கிய முன்னேற்றங்களை உருவாக்கும் முயற்சியில் அவர் தற்போது தனது புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார்.

Tags: Elon muskspace xDEVENDRA SINGH
ShareTweetSendShare
Previous Post

வழிக்கு வந்த ட்ரம்ப்..ரஷ்ய எண்ணெய் வாங்க பிற நாடுகளுக்கும் அனுமதி!

Next Post

நேட்டோ கூட்டமைப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்த ட்ரம்ப்..ஒட்டுமொத்தமாக புறக்கணித்துவிட்ட உலக நாடுகள்

Related News

எங்கும் தாமரை மலர்வதை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது – ஷெசாத் பூனாவாலா

சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு புதிய விதிமுறை – நாளை முதல் அமல்!

பெங்களூரு அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் 7 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு – ஒரு பேரல் 120 டாலராக அதிகரிப்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளை பயன்படுத்தியதாக புகார் – விஜய் மீது நடவடிக்கை எடுக்க குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை!

3-வது பிரசவத்திற்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்

உத்தரப்பிரதேச மக்களை இழிவுப்படுத்தும் திமுக போன்ற கட்சிகளுடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி – பிரதமர் மோடி

மேற்குவங்க இறுதிகட்ட தேர்தல் – 91.71 % வாக்குகள் பதிவு!

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

ஐபிஎல் கிரிக்கெட் – மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் வெற்றி!

மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

புதுச்சேரியில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுகிறது தவெக – ஆக்சிஸ் மை இண்டியா கருத்துக்கணிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies