நெல்லை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள அனவன் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையை மோப்ப நாய் உதவியுடன் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
அம்பாசமுத்திரம் அருகே அனவன் கிராம பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வனச்சரக அலுவலர் சத்தியவேல் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு சிறுத்தையை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதத்தில் மட்டும் இப்பகுதியில் சுற்றித்திரிந்த 4 சிறுத்தைகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.