மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா, சிவராஜ் சிங் சவுஹான் ஆகியோர் தங்களது அலுவலகங்களில் முறைப்படி, கையொப்பமிட்டு அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராக அமித் ஷா, தனது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வாழ்த்து தெரிவித்தார்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற ஜெ.பி. நட்டாவுக்கு இணையமைச்சர்கள் அனுபிரியா படேல், ஜாதவ் கண்பத்ராவ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சிவராஜ் சிங் சவுஹான் வேளாண் அமைச்சர் பொறுப்பை ஏற்கும் முன்பாக தனது அலுவலகத்தில் உள்ள விநாயகர் சிலைக்கு பூஜை செய்து வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க மத்திய அரசு முயற்சிக்கும் என்று உறுதியளித்தார்.
இதேபோல மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சராக ஹர்தீப் சிங் புரியும், சட்டத் துறை இணையமைச்சராக அர்ஜூன்ராம் மேக்வாலும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.