திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் தொடர் மின்தடையால் பாதிக்கப்பட்டவர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட சின்னகாவனம், பெரியகாவனம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தொடர் மின்தடையால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.
இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள், பொன்னேரி துணை மின் நிலைய செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.