மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் ஐஐடி மெட்ராஸ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு, சென்னை இந்திய தொழில்நுட்ப கழக வளாகத்தில் நான்கு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.
இந்நிலையில் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் பொழுதுபோக்கு பாடத்தை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் மாணவர்கள் விளையாட்டு, நடனம், நாடகம் மற்றும் இணை பாடத்திட்ட செயல்பாடுகளை கற்க முடியும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நான்கு வாரங்கள் கூடுதல் விடுமுறை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிடெக் இரண்டாம் ஆண்டில் தொழில்முனைவோர் படிப்பை அறிமுகப்படுத்த ஐஐடி திட்டமிட்டுள்ளது.