முக்கிய பிரமுகர்களை பாதுகாக்கும் பணியில் இருந்து கருப்பு பூனைப்படை கமாண்டோக்கள் விரைவில் விடுவிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பயங்கரவாத தாக்குதல்கள், விமான கடத்தல்கள் ஆகியவற்றை எதிர்கொள்ள் கருப்பு பூனைப்படை தொடங்கப்பட்டது.ஆனால், காலப்போக்கில் கருப்பு பூனைப்படை கமாண்டோக்கள், மிக முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்புக்கு அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில், முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு பொறுப்பில் இருந்து கருப்பு பூனைப்படை, இந்தோ திபெத்திய எல்லை போலீஸ் படையை முற்றிலும் விடுவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்மூலம், சுமார் 450 கருப்பு பூனைப்படை கமாண்டோக்கள் அப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு வேறு பணிகளுக்கு அனுப்பப்படவுள்ளனர்.