திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே டன் கணக்கில் மாங்காய் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
காவலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மாந்தோப்புகளில் மாங்காய்கள் டன் கணக்கில் திருடு போவதாக விவசாயிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் மந்தாரகுட்டை பகுதியை சேர்ந்த சிரஞ்சீவி மற்றும் அண்ணாமலை ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.