சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக திபெத்தின் பல பகுதிகளுக்கு புதிய பெயர் சூட்ட இந்தியா திட்டமிட்டுள்ளது.
அருணாசல பிரதேசத்தை திபெத்தின் ஒரு பகுதியாக கருதும் சீனா, அங்குள்ள பல இடங்களுக்கு பெயர் சூட்டியது.
சீனாவின் இந்த நடவடிக்கையை எதிர்க்கும் வகையில், திபெத்தில் 20-க்கும் மேற்பட்ட பகுதிகளுக்குப் புதிய பெயர் சூட்ட இந்தியா திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெயர் மாற்றம் செய்யப்படவுள்ள இடங்களின் பட்டியல் ராணுவத்தின் மூலம் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.