அதீத நம்பிக்கையுடன் இருந்த பாஜக தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் யதார்த்த உண்மையை உணர்த்தி இருப்பதாக ஆர்எஸ்எஸ் மூத்த உறுப்பினர் ரத்தன் சாரதா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆர்கனைசர் இதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையில்,
தொகுதிகளில் வெற்றி என்ற பிரதமர் மோடியின் அழைப்பு தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு என்பதையும், அது எதிர்க்கட்சிகளுக்கு விடுக்கப்பட்ட சவால் என்பதையும் நிர்வாகிகள் உணரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
களத்தில் கடும் உழைப்பின் மூலமே இலக்குகளை எட்ட முடியுமே தவிர, சமூக ஊடகங்களில் போஸ்டர்களையும் செல்பிகளையும் பகிர்வதால் எட்ட முடியாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
மாயையில் சிக்கிய பாஜக தொண்டர்களும் தலைவர்களும் நரேந்திர மோடியின் செல்வாக்கில் நம்பிக்கை கொண்டு, எதார்த்த கள நிலவரம் குறித்து காதுகொடுத்து கேட்காமல் இருந்ததாகவும் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகளுக்கு உள்ளூர் பிரச்சினை, வேட்பாளர்கள் மற்றும் கடந்த காலச் செயல்பாடு முக்கிய காரணம் என்றும், உள்ளூர் பாஜக தொண்டர்கள் தேர்தலில் ஆர்வமின்றிப் பணியாற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.