ஒடிசாவில் இருந்து தமிழகத்துக்கு கஞ்சா கடத்திய வாலிபரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.
ரகசிய தகவலையடுத்து ஈரோடு பெருந்துறை சிப்காட் பகுதியில் மதுவிலக்கு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சுசாந்த குமார் சகோ என்ற வடமாநில இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 3 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.