மக்களவைக் கூட்டத்தொடர் ஜூன் 24-ஆம் தேதி தொடங்குவதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றதை அடுத்து, 18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் ஜூன் 24-ஆம் தேதி தொடங்குகிறது.
முதல் மூன்று தினங்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
எட்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத் தொடர் ஜூலை 3-ஆம் தேதி நிறைவடைகிறது. இதேபோல மாநிலங்களவை ஜூன் 27-ஆம் தேதி தொடங்கி ஜூலை 3-இல் நிறைவடையும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.